இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு அவுஸ்ரேலியர்கள் கைது

இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களிற்கான ஒப்பந்தங்களை பெற முயன்றனர்  என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலநாடுகளை அடிப்படையாக கொண்டு ஒரு தசாப்தகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தென்னாசியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தை சேர்ந்த இருவரையே அவுஸ்திரேலிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

14 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான உட்கட்டமைப்பு திட்டமொன்றை இலங்கையில் பெறுவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த என்ற பொறியல் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

2017 இல் குறிப்பிட்ட நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் இலங்கை பங்களாதேஸ் இந்தியாவில் உட்கட்டமைப்பு திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கி தடை விதித்தது.

இந்த நிறுவனம் சட்டவிரோத கொடுப்பனவில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக  உலக வங்கி தெரிவித்திருந்தது.