• Tuesday, March 3, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

போராட்டக்காரர்களை அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்த முடியாது’ அஜந்தா பெரேரா

By Admin On Sep 8, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக போராட்டக்காரர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பதால் அச்சமடையப்போவது இல்லையென தென்னிலங்கையில் சிவில் சமூக செயற்பாட்டாளரும், சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

எவ்வாறான அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், கைதுகள் விசாரணைகள் இடம்பெற்றாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடருமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

காரணம் எதுவும் அறிவிக்கப்படாமல் கலாநிதி அஜந்தா பெரேரா குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இதுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டத்தில் பங்கேற்ற அன்னையர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள். காரணம் எங்கள் போராட்டம் எமது உள்ளத்தில் காணப்படுகின்றது. அதற்கு காரணம் எதிர்கால எமது சந்ததிக்காக நல்லதொரு நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென நாம் நினைக்கின்றோம்.  தொடர்ச்சியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எம்மை அழைத்தார்கள் என்பதற்காக நாம் போாராட்டத்தை கைவிடப்போவது இல்லை. எமது உள்ளத்தில் உள்ள போராட்டம் தொடரும். போராட்டத்தின் ஊடாக உருவான ஜனாதிபதியாலும், பிரதமராலும்கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இதற்காகவா நாம் போராட்டங்களை முன்னெடுத்தோம். பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை பட்டினிச் சாவில் தள்ளவா 23.3 மில்லியன் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள்? நாங்கள் வருமானத்தை உழைப்பதற்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இருக்கின்ற பணத்தையும் இழந்தே போராட்டத்தில் பங்கேற்றோம். இந்த போராட்டம் தொடரும். என்றார்.

சிவில் சமூக செயற்பாட்டாளரும், சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Prev Post

நாடாளுமன்றத்தில் அனைவரும் கொள்ளையர்கள், வீட்டுக்கு அனுப்புவோம்’ அருட்தந்தை சத்திவேல்

Next Post

வழக்கு விசாரணைகள் இன்றி இளைஞர்கள் தடுத்து வைப்பு’ செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கொலன்னாவை எரிபொருள் முனையத்தின் தற்போதைய விநியோக நிலைமை…

Mar 2, 2026

வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய…

Mar 2, 2026

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி…

Mar 2, 2026

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பரவும் வதந்திகளை நம்ப…

Mar 1, 2026

கொழும்பில் பல பகுதிகளில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள்:…

Mar 1, 2026

கொழும்பில் தேசிய ரீதியில் சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பும்…

Mar 1, 2026

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகலமாக…

Feb 27, 2026

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இந்தியப்…

Feb 27, 2026

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: மின்சார சபைக்கு பல…

Feb 27, 2026

பொடி லெசி கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து…

Feb 27, 2026
Prev Next 1 of 71
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.