• Tuesday, March 3, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பு : செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்;. அட்டைப்பண்ணை, இறால் பண்ணை இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அதற்குள்ளே சிக்க வைத்து இந்தியாவிற்கு எதிரானவர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை சீனா செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது தங்களுடைய கடமையாக இருக்கின்றது என்றும், சீனாவினுடைய ஆதிக்கம் வடக்கில் குறிப்பாக கரையோர பிரதேசங்களில் அதிகரிப்பதை  அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது.

Catchup shows

இந்தியாவிற்கு பாதுகாப்பு விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே தாம் அவதானிப்பதாக அவர் தெரிவித்தார்.அந்தவகையிலே வடக்கில் சீனாவினுடைய பிரதிநிதிகள், அவர்களுடைய முகவர்கள் வடக்கிலே கூடுதலாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள் என வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் தெரிவித்தார்.

Prev Post

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை: ஜனாதிபதி வழங்கிய தகவல்

Next Post

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்இலங்கையை பாரப்படுத்த வேண்டி தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கொலன்னாவை எரிபொருள் முனையத்தின் தற்போதைய விநியோக நிலைமை…

Mar 2, 2026

வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய…

Mar 2, 2026

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி…

Mar 2, 2026

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பரவும் வதந்திகளை நம்ப…

Mar 1, 2026

கொழும்பில் பல பகுதிகளில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள்:…

Mar 1, 2026

கொழும்பில் தேசிய ரீதியில் சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பும்…

Mar 1, 2026

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகலமாக…

Feb 27, 2026

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இந்தியப்…

Feb 27, 2026

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: மின்சார சபைக்கு பல…

Feb 27, 2026

பொடி லெசி கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து…

Feb 27, 2026
Prev Next 1 of 71
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.