• Wednesday, May 13, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை: ஜனாதிபதி வழங்கிய தகவல்

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை வரலாற்றில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியமான படியாகும் எனவும், வங்குரோத்து நிலை மற்றும் கடனை செலுத்துவதில் உள்ள சிரமம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க ‘இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான படி.  முதல் முறையாக திவால்நிலையை அறிவித்துள்ளோம்.

Catchup shows

தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு இன்றியமையாத காரணம். திவால்நிலையிலிருந்து விடுபடுவது மற்றும் சிரமத்திலிருந்து விடுபடுவதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.  இது ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் மிகவும் போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்பதோடு, சமூக நிலைமைகளை உயர்த்துவதும் தமது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

ஆரம்பமே கடினமாக இருக்கும். எனினும் மேலும் வளர்ச்சி அடைய முடியும் என்பதை தான் அறிவதாகவும், நமது சமூக சேவைப் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய வகையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று முழு நாட்டையும் கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

கொழும்பில் காணாமற் போன தமிழ் மாணவன்

Next Post

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பு : செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

முதலமைச்சர் பதவிக்காக திமுகவோ, அதிமுகவோ என்னை…

May 12, 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மீண்டும்…

May 12, 2026

அதிக விலைக்கு பொருட்களை விற்ற பிரபல விடுதி, வர்த்தக…

May 12, 2026

கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி, மீனவர்கள் போராட்டம்!

May 12, 2026

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள் கைது!

May 12, 2026

அஸர்பைஜானிலிருந்து அழைத்துவரப்பட்ட படுவத்தே சாமர 72 மணிநேர…

May 12, 2026

நல்லூரில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்…

May 12, 2026

”தங்கம் வாங்க வேண்டாம்!”.இந்திய பிரதமர் மக்களிடம் கோரிக்கை

May 11, 2026

மகளிர் முன்னேற்றமே லட்சியம்.ரூ.2500 உரிமைத் தொகை முதல்…

May 11, 2026

முதலமைச்சர் விஜய்க்கு தமிழரசுக் கட்சி வாழ்த்து

May 11, 2026
Prev Next 1 of 135
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.