• Saturday, March 14, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை: ஜனாதிபதி வழங்கிய தகவல்

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை வரலாற்றில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியமான படியாகும் எனவும், வங்குரோத்து நிலை மற்றும் கடனை செலுத்துவதில் உள்ள சிரமம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க ‘இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான படி.  முதல் முறையாக திவால்நிலையை அறிவித்துள்ளோம்.

Catchup shows

தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு இன்றியமையாத காரணம். திவால்நிலையிலிருந்து விடுபடுவது மற்றும் சிரமத்திலிருந்து விடுபடுவதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.  இது ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் மிகவும் போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்பதோடு, சமூக நிலைமைகளை உயர்த்துவதும் தமது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

ஆரம்பமே கடினமாக இருக்கும். எனினும் மேலும் வளர்ச்சி அடைய முடியும் என்பதை தான் அறிவதாகவும், நமது சமூக சேவைப் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய வகையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று முழு நாட்டையும் கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

கொழும்பில் காணாமற் போன தமிழ் மாணவன்

Next Post

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பு : செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு… திருமாவளவன்…

Mar 13, 2026

‘இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை…

Mar 13, 2026

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான இந்திய செய்மதித் தொலைக்காட்சி…

Mar 13, 2026

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக…

Mar 13, 2026

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில்  வவுனியா  அபிவிருத்திக் குழு…

Mar 13, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு…

Mar 13, 2026

 இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை…

Mar 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் அவசர…

Mar 13, 2026

டித்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக…

Mar 12, 2026

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது:…

Mar 12, 2026
Prev Next 1 of 82
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.