• Saturday, June 3, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை: ஜனாதிபதி வழங்கிய தகவல்

By Admin Last updated Sep 1, 2022
140
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை வரலாற்றில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியமான படியாகும் எனவும், வங்குரோத்து நிலை மற்றும் கடனை செலுத்துவதில் உள்ள சிரமம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க ‘இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான படி.  முதல் முறையாக திவால்நிலையை அறிவித்துள்ளோம்.

தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு இன்றியமையாத காரணம். திவால்நிலையிலிருந்து விடுபடுவது மற்றும் சிரமத்திலிருந்து விடுபடுவதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.  இது ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் மிகவும் போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்பதோடு, சமூக நிலைமைகளை உயர்த்துவதும் தமது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

ஆரம்பமே கடினமாக இருக்கும். எனினும் மேலும் வளர்ச்சி அடைய முடியும் என்பதை தான் அறிவதாகவும், நமது சமூக சேவைப் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய வகையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று முழு நாட்டையும் கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

கொழும்பில் காணாமற் போன தமிழ் மாணவன்

Next Post

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பு : செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில்…

Jun 3, 2023

பரீட்சைக் கடமைகளிலுள்ள அதிபர் சேவை நேர்முகத் தேர்வு…

Jun 2, 2023

ஆடுகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானம்.

Jun 2, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில்  மாணவர்களின் பாடசாலை இடைவிலகல்  …

Jun 2, 2023

தாய்லாந்தின் தொழில்முனைவோர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய…

Jun 2, 2023

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பில்…

Jun 2, 2023

எதிர்க்கட்சியினர் இரட்டை வேடம் போடுவதாக பாராளுமன்ற…

Jun 2, 2023

மாணவர்கள் ஊடாக புறாக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்.

Jun 2, 2023

எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும்.

Jun 2, 2023

மகாவலி  ஜே வலயத்துக்கு தகவல் வழங்க கூடாது என ஒருங்கிணைப்புக்…

Jun 2, 2023
Prev Next 1 of 188
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.