• Wednesday, February 1, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்இலங்கையை பாரப்படுத்த வேண்டி தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம்

By Admin Last updated Sep 1, 2022
53
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையை தூண்டுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் பேரவையின் இணைத் தலைமை நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கடிதத்தில், ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகள் எனப் பல தரப்பினர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது. எனவே, மேலும் கால அவகாசங்களை வழங்குவது அர்த்தமற்றது. ஐ. நா. பாதுகாப்பு சபையில் சீனா தனது ‘வீற்றோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்று உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.இந்தக் கருத்துக்கள் ஆதரமற்றவை.

இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐ. நா. பாதுகாப்பு சபை ஊடாக மனித உரிமைகள் மீறல்களுக்காக ஐ. சி. சியில் பாரப்படுத்தியபோது அதற்கு எதிராக எந்தநாடும் வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. இதேபோன்று வட கொரியாவையும் ஐ. சி. சியில் பாராப்படுத்துவதற்கான விடயமும் ஐ. நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு மனித உரிமைகள் பேரவை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Prev Post

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பு : செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

Next Post

விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி கண்டெடுப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

பெண் சீடரை கற்பழித்த சாமியார் ஆசரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை.

Jan 31, 2023

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 11-வது…

Jan 31, 2023

பிரான்ஸில் பாரிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ரூபன் உடன்…

Jan 31, 2023

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்:…

Jan 31, 2023

ஹோட்டல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி.

Jan 31, 2023

காணாமல் போன சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

Jan 31, 2023

வசந்த முதலிகே விடுதலை.

Jan 31, 2023

13 ஆவது திருத்தம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பௌத்த…

Jan 31, 2023

மைத்திரியின் மன்னிப்பை ஏற்க மறுத்த கத்தோலிக்க திருச்சபை!

Jan 31, 2023

தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில்…

Jan 31, 2023
Prev Next 1 of 113
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.