கட்டாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி:பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கின்றது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கத்தாரில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு வழங்கி இருக்கிறது.  பாகிஸ்தான் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் விரைவில் கத்தார் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கின்ற நிலையில் உலககோப்பை கால்பந்து போட்டிற்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்ற நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

முன்னதாக கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பதாக நோட்டா அமைப்பு கூறியுள்ளது. அதேபோல கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 3,250 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த துருக்கி அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.