கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள்.

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைகள் மிக விரைவில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் அடிப்படையில் பொருத்தமானவர்களை நியமிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.