போர்நிறுத்தம் அமுலில் உள்ளபோதே 380 பேர் உயிரிழந்துள்ளனர்.லெபனான் சுகாதாரத் துறை தகவல்
Meiveli Media Team

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 17 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகும், இஸ்ரேல் தெற்கு லெபனானில் தாக்குதல்களை தொடர்ந்துள்ளது.லெபனான் சுகாதாரத் துறை தகவலின்படி, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இதுவரை சுமார் 380 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,122 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 39 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் அடங்குகின்றனர்.நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த இஸ்ரேல் தாக்குதல்களில் தெற்கு லெபனானில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபதியே நகரில் முன்னதாக நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்க சென்ற இரண்டு மீட்புப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.லெபனான் சுகாதார அமைச்சர் ரகான் நாசரெட்டீன், இஸ்ரேல் நடவடிக்கைகள் சர்வதேச விதிமுறைகளை முற்றிலும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்காவில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

