• Saturday, December 6, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – சுதேஷ் நந்திமால்

By Admin Last updated Sep 12, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும்  மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள்  கிளர்ந்தெழ வேண்டுமென தென்னிலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால், ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

Catchup shows

இன்று மக்கள் ஆணைக்கு அப்பால் சென்று  அரச பயங்கரவாதம் செயற்படுகின்றது. இராணுவத்தை பயன்படுத்தி தடிகளை எடுத்துக்கொண்டு, மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டத்தை, மக்களின் ஜனநாயக உரிமையை இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்துகின்றார்கள். ஆகவே யார் இந்த நாட்டில் தீவிரவாதி? ஊழலுடனான இந்த ஆட்சிக்கு எதிரான இளைஞர் யுவதிகளா? இல்லாவிடின் ரணில் விக்ரமசிங்க, மொட்டுக் கட்சி இணைந்த இந்த அரசாங்கமா? இதனை மக்கள் புரிந்துகொள்ள முடியுமா? ரணில் விக்ரமசிங்க பல கனவுகளை இந்த மக்களுக்கு வழங்குகின்றார் எனினும் அதில் ஒன்றுமே பலிக்காது. அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி, தமது ஜனாதிபதி ஆசனத்தை காப்பாற்றி மீண்டும் ராஜபக்சவின் புதல்வருக்கு இந்த பதவியை வழங்கும் நோக்கத்தை நோக்கி அவர் பயணிக்கின்றார். பொறுத்தது போதும் மேலும் தாமப்படுத்த வேண்டாம். என்றார்.

ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது ஆயுதப் படைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் அரசாங்கமும், அதிகாரிகளுமே பயங்கரவாதிகள் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

Next Post

‘இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது’  அருட்தந்தை ரொஹான் சில்வா

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.