விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு சிறப்புரிமை.

இலங்கையில் எதிர்வரும் தேர்தல்களில் விசேட தேவையுடையவர்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவது உள்ளிட்ட சில விசேட திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.