மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நடந்த மிக மோசமான இயற்கை பேரழிற்விற்கு கவலை தெரிவிக்கும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்கு விஜயம்.

 

அண்மையில், மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அங்கு ஏராளமான சொத்துக்கள் அழிந்ததோடு, பல உயிர்களும் பலியாகின. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) கொழும்பிலுள்ள மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்கு விஜயம் செய்து இந்த அனர்த்தம் தொடர்பாக தனது வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்தார்.

மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்கள் தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆறுதல் தெரிவித்தார். ஒரு நாடு என்ற வகையில் மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தேவையான பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவேன் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.