ஒலிம்பிக் போட்டிக்காக திறக்கப்படும் வெர்சாய்ஸ் அரண்மனை.

1979 முதல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள வெர்சாய்ஸ் அரண்மனை ஒலிம்பிக் போட்டிக்காக திறக்கப்படவுள்ளது.

இந்த கோடையில் ஒலிம்பிக் நிகழ்வுகளை நடத்தும் ஒரு மாயாஜால வரலாற்று நினைவுச்சின்னம் பல தசாப்தங்களாக மறைக்கப்பட்ட ‘அசாதாரண அறியப்படாத இடங்களைக் வெளிக்கொணர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளை நடத்த இது ஒரு விசித்திரமான இடமாகத் தோன்றுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1924 இல் ஒலிம்பிக் கலை மற்றும் விளையாட்டு போட்டிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட இடமாக இது மாறியுள்ளது. இலக்கியம், ஓவியம், இசை, சிற்பம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பண்டைய கிரேக்கத்தில் நடத்தப்பட்டதால் விளையாட்டுகளின் உணர்வைப் பாதுகாக்கும் முயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களாக 392 மில்லியன் பவுண்டுகள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடம் சுமார் 75, 000 சதுர மீட்டர் மற்றும் 1897 இல் பிரெஞ்சு தலைநகரின் முக்கிய கலை நிகழ்வுகளை நடத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.