மலேசியா- நடுவானில் மோதி விழுந்த இரு ஹெலிகாப்டர்கள்.

10 பேர் பலி.

மலேசியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடற்படை தினத்தையொட்டி ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி ஒத்துகையின்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் 2 கடற்படை ஹெலிகாப்டர்களில் பயணித்த மொத்தம் 10 பேரும் உயிரிழந்ததாகவும் மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் இருந்து வடமேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லுமுட் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளியில், ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் மற்றொன்றின் மீது உரசுவது, இரண்டு ஹெலிகாப்டர்களும் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக கீழே விழுவதும் பதிவாகியுள்ளது.

விபத்தின்போது 7 பேரைக் கொண்ட ஹெலிகாப்டர் தரையில் விழுந்துள்ளது. 3 பேரை கொண்ட மற்றொரு ஹெலிகாப்டரில் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.