நுவரெலியாவில் ஆள்பதிவு திணைக்கள அலுவலகம் திறப்பு.

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியா மாவட்ட மக்களின் நன்மை கருதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயம் ஒன்று (22) திங்கட்கிழமை நுவரெலியா இலக்கம் 95/26 A, லேடி மெக்லம் வீதி ஹாவஎலிய என்ற புதிய விலாசத்திலுள்ள பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் திறந்து வைத்தார்.

மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் விதத்தில் நுவரெலியாவில் குறித்த அலுவலகம் திறக்கப்படுகிறது மேலும் சாதாரண சேவையூடாக தேசிய அடையான அட்டைகளை பெறுவதற்கான அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெகு விரைவில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படுமெனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.

குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் சீ.பி.ரட்ணாயக்க மருதுபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட மக்கள், அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக கொழும்புக்கு சென்று வர வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த மாவட்ட காரியாலயம் திறக்கப்படுவதன் மூலமாக அந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.