மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும்:  கை விரலை அறுத்து, காளிக்கு இரத்த காணிக்கை செய்த நபர்.

பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும் என, பிரார்த்தனை செய்த ஒருவர், தன் கை விரலை அறுத்து, காளிக்கு இரத்த காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோனார்வாடா பகுதியைச் சேர்ந்தவர் அருண். எஸ்.வர்ணேகர். இவர் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்துள்ளார்.

தன் வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் தேசிய தலைவர்களின் படத்தை ஒட்டியுள்ளார். இந்நிலையில், மீண்டும் மோடி பிரதமராக வேண்டுமென வேண்டிக் கொண்டு தனது விரலை துண்டித்துள்ளார்.

மேலும், இதில் வெளியேறிய இரத்தத்தைக் கொண்டு ‘காளிமாதா மோடியைக் காக்க’ என எழுதியுள்ளார்.தன் இரத்தத்தால் சுவரில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்’ என, எழுதியுள்ளார். கத்தியால் தன் விரலை வெட்டிக் கொள்ளும் காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. குறித்த நபர் அவரது மார்பில் மோடி ‘டாட்டூ’ போட்டுள்ளார்.கடந்த முறை லோக்சபா தேர்தல் நடந்தபோது, மோடி பிரதமராக வேண்டும் என, பிரார்த்தனை செய்து தன் கை விரலை அறுத்து காளிக்கு ரத்தத்தை காணிக்கை செலுத்தினார். சாமி படங்களுக்கு ரத்தப் பொட்டு வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.