இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்: பிரதமர் மோடி தெரிவிப்பு.

விவசாயிகளின் நலனின் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏனைய துறைகள் போன்று விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை வழங்க வேண்டும் எனக் கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் புதுடெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.இந்த நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் விவசாயிகளின் போராட்டம் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.