இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரனுக்கு, ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகாண்டா சென்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று முன்தினம் தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில்இ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்படி வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 184 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்தனர். மேலும், வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஒருவர் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவை ஆகும்.

அதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஸ்ரீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.