தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சில கத்தோலிக்க ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

குறித்த வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர்.

அதேவேளை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி புனித அந்தோனியார் ஆலய தைப்பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் காலை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அடிகளார் தலைமையில் பொங்கல் பொங்கி சிறப்புத் திருப்பலி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.