குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவு.

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கையளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதி நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தேக நபர்களில், 35,505 பேருக்கு பிடியாணைகளும், இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) இடம்பெற்ற குற்றங்களுக்காக தேடப்படும் சந்தேக நபர்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் நீதி நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று அறிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றப்பிரிவு அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா உத்தரவிட்டுள்ளார்.