தேர்தலை நடத்துவதற்கு அஞ்சும் ஜனாதிபதி-பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

தேர்தல் நடக்கும் என்று சொல்வது ஜனாதிபதிக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவருக்காக போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் நடக்கும் என்று சொல்வது ஜனாதிபதிக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது. அவர் இவ்வாறு கூறி தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள பார்க்கின்றார்.

ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். அதை நடத்தினால் தான் ஜனாதிபதி ஏனைய தேர்தல்களைப் பற்றி சிந்திக்க முடியும்.

அவர் தேர்தலை நடத்த அச்சப்படம் நிலைமையே காணப்படுகிறது. தேர்தல் என்றாலே விசர் நாய் தண்ணீரை கண்டது போல் பயப்படுகின்றார். ஆகவே, அவர் தேர்தலை நடத்தவே மாட்டார்.

எதிர்வரும் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதன்பின் யார் ஜனாதிபதியாக வருகின்றார்களோ அவர் தேர்தலை பற்றி யோசிப்பார்.

இலங்கையில் தற்போதைக்கு வேறு தேர்தல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. ஏதேனும் அதிசயங்கள் அல்லது அழுத்தங்கள் இடம்பெற்றால் மாத்திரமே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.“ என தெரிவித்தார்.