அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைக்காது : ஜீ. எல். பீரிஸ்!

நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொ|ழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் பதவி மாற்றமானது தலை வலிக்குத் தலையனையை மாற்றுவது போன்றது. இவை அனைத்து கண் கட்டும் வித்தைகள்.

இவை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.

நாட்டில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு அமைச்சரை மாற்றி இன்னொரு அமைச்சரை நியமிப்பதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் கூறினால் இதனை நம்ப முடியுமா?

சங்கீதக் கதிரை விளையாட்டே இதில் இடம்பெறுகின்றது.

மக்களின் எதிர்ப்பு எரிமலையை போன்று எரியும் சந்தர்ப்பத்தில் மக்களுக்கு அரசாங்கத்தின் பதில் இதுவாய் இருக்கின்றது.

வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே இதற்கான சரியான தீர்வு”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.