தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் கட்சிகள் : அமைக்கப்போகும் புதிய கூட்டணி.

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் கட்சிகள் அதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, ஆர் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் கட்சிகள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வனுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.