திருகோணமலை-ஜூலை கலவரத்தின் கொல்லப்பட்ட ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது .

Keshihan Ilamuruganathan-திருகோணமலை

1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு இன்று மாலை 4 மணி அளவில் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

அவருடன் திருக்கோணமலையைச் சேர்ந்த ஈழ மக்கள் விடுதலை இயக்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

போராளிகளின் படங்களுக்கு பூத்தூவி அஞ்சலி செலுத்தி, நினைவு தீபமும் ஏற்றப்பட்டது. 2 நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.