அரசு மற்றும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான பேச்சு குழப்பமின்றி தொடர வேண்டியது இரு தரப்பினரதும் பொறுப்பு: சந்திரிகா பண்டாரநாயக்க.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப் பேச்சும் குழம்பிப் போகாமல் அதைத் தொடர வேண்டியது இரு தரப்பினரதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது என்பதை தான் அன்று தொடக்கம் இன்று வரை எடுத்துரைத்து வருவதாக சுறிய அவர், தனது ஆட்சியில் அரசியல் தீர்வுக்காக தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த முயற்சி ஏன் பலனளிக்கவில்லை என்பதும், அதைக் குழப்பியடித்த தரப்பினர்கள் யார்இ யார் என்றதையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.