காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ விபத்து.

தெஹிவளை மேம்பாலத்தில் இன்றிரவு காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ பரவியுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி  தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.