நுவரெலியாவில் விலை உயர்ந்த சைப்ரஸ் மரங்கள் வெட்டப்படுகின்றன.

நுவரெலியாவில் தற்பொழுது மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்?

இலங்கையின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா நகரமாகிய நுவரெலியா நகரில் உள்ள வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த 150 வருடங்ளுக்கு மேலாக பழமை வாய்ந்த நுவரெலியாவின் அழகிற்கு பெருமை தேடி கொடுக்கம் ” சைப்ரஸ்” மரங்கள் விறகிற்காக வெட்டப் படுகின்றன. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது எவருக்கும் தெரியாமல் உள்ளது.

என நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் நுவரெலியா சுற்றாடல் பாதுகாப்பு குழு தலைவருமான மகிஹிந்த தொடபேகமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நுவரெலியாவில் கடந்த 150 வருடங்களுக்கு முன் நாட்டப்பட்ட மரங்கள் கடந்த பல நாட்களாக வெட்டப்படுகிறது. இதற்க்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியாமல் உள்ளது.

நுவரெலியாவிலுள்ள பாரிய “சைப்ரஸ் ” மரங்களின் கிளைகள் வெட்டுவதாக கூறி மரங்களை மொட்டையாக வெட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவதால் நுவரெலியாவின் இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. அத்தோடு மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றன .

நுவரெலியா நகரிலுள்ள ” சைப்ரஸ்” மரங்களை விறகுக்காக வெட்ட அனுமதித்த பலசாலி யார்? கிளைகளை வெட்டுகிறோம் என்ற போர்வையில் பல வாரங்களாக மரங்கள் அகற்றப்பட்ட்டுவருகின்றன. கடந்த காலங்களில் தர்மபால சுற்று வட்டாரத்திற்கு அருகிலுள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன அந்த இடத்தில் ஒரு தனியார் ஹோட்டல் உரிமையாளரின் வாகன தரிப்பிடமாக தற்பொழுது காட்சியளிக்கின்றது. நுவரெலியா நகரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இரு பக்கங்ளிலுள்ள விலையுயர்ந்த சைப்ரஸ் மரங்களும் காரணமின்றி வெட்டப்படுகின்றன.

நுவரெலியா மாநகரசபையில் நகரை அழகு படுத்துவதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நுவரெலியா நகரிலுள்ள சகல அரச திணைக்களத்திலுள்ள உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். அந்த குழுவிலும் அனுமதி பெறாமல் இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவது. நுவரெலியா நகரத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே நகரிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஹிந்த தொடம்பேகமகே மேலும் தெரிவித்தார்.