• Sunday, June 22, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்திற்கு தொழிற்சங்கத் தலைவர் கடும் எதிர்ப்பு

By Admin On Sep 9, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமைக்கு தென்னிலங்கையின் பிரபல வைத்திய தொழிற்சங்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு ஊடாக விஞ்ஞான ரீதியாக 18 அல்லது 20 அமைச்சர்கள் போதுமானது எனவும், முடிந்தால் இந்த மாற்றத்தை முதலில் செயற்படுத்துமாறும், வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், மக்கள் பேரவையின் உறுப்பினருமான ரவி குமுதேஷ் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்திளயுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

Catchup shows

சாதாரண மக்களுக்கு வரிச்சுமையை அதிகரித்துவிட்டு, குறைந்தது அத்தியாவசியமாக மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கேனும் நிவாரணத்தை வழங்கும் செயற்பாட்டையாவது முன்னெடுக்கத் தவறியுள்ள அரசாங்கம், அரசாங்கம் பல இராஜாங்க அமைச்சுக்களை நியமித்துள்ளது. நாங்கள் ஏற்கனவே மக்கள் பேரவை என்ற வகையில் செங்கடகல பிரகடனத்தின் ஊடாக விஞ்ஞானப் பூர்வமான 18 அல்லது அதிகபட்சமாக 20 அமைச்சுக்களையும், அவசியமெனின் மாத்திரம் 20  பிரதி அமைச்சுக்களை நியமிக்குமாறு வலியுறுத்தியிருந்தோம். இந்த சிறிய நாட்டை நிர்வகிக்க இது போதுமானது. எனினும் அரசாங்கத்திற்கு முன்னுதாரணம் என எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் மீண்டும் நியமனங்களை வழங்கி, சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மக்களின் வரிச்சுமையை அதிகரிக்கின்றது. பல பணிப்பாளர்கள், ஆலோசகர்களை அரசாங்கம் நியமித்துள்ளது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என எவருக்கும் தெரியாது. இவ்வாறு செயற்படுகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி இல்லையா? இந்த நாட்டை  நிர்வகிக்க ஊடாக விஞ்ஞானப் பூர்வமான 18 அல்லது அதிகபட்சமாக 20 அமைச்சுக்கள் போதும், அவசியமெனின் மாத்திரம் 20  பிரதி அமைச்சுக்களை போதும் முடிந்தால் முதல் நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் இதனை செய்து காட்டட்டும். என்றார்.

பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சுமைகளையும் பொது மக்கள் மீது சுமத்தியுள்ள அரசாங்கம் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Prev Post

வழக்கு விசாரணைகள் இன்றி இளைஞர்கள் தடுத்து வைப்பு’ செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

Next Post

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி: 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின்…

May 20, 2025

தமிழ் டயஸ்போராவுக்கு அரச தரப்பில் ஆதரவு? – சரத்…

May 20, 2025

இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும்…

May 20, 2025

ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…

May 16, 2025

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது…

May 15, 2025

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு…

May 15, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச…

May 15, 2025

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.