அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
![](https://meiveli.com/wp-content/uploads/2022/09/1661947978-Education-Ministry-issues-special-notice-on-school-holidays-6.jpg)
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை இன்றுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்று முதல் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.