• Tuesday, February 24, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

திருடர்கள், கொலைகாரர்கள் அற்ற கட்சியே நாட்டை மீட்கும்; சந்திரிக்கா குமாரதுங்க

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 5, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஊழலற்ற கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்காத அரசியல் கூட்டணி ஒன்றின் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியுமென   இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் கட்சியில் நாட்டை நேசிக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்வது முக்கியமான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எனினும் திருடர்களையும், கொலைகாரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான,  பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள நவ லங்கா நிதஹாஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திந்து வைத்து உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுநாட்டிலும் இன, மத பேதங்களை மறந்து, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென குமார வெல்கம உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். எனினும் ஒன்றை நான் தெரிவிக்கின்றேன். திருடர்களை இணைத்துக்கொள்ள வேண்டாமென கோருகின்றேன். தெரிவு செய்யுங்கள். கொலைகாரர்கள், திருடர்களை ஒன்றிணைத்தால் முன்கொண்டுச் செல்ல முடியாது. போராட்டக்காரர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அவர்களை அடக்குகின்றது. கைது செய்கின்றது. இந்த போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை ஆரம்பம் மாத்திரமே. ஆகவே நாம் அனைவரும் அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டிற்கு என்னத் தேவையென்ற கோணத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். என்றார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெரும்பாலானவர்கள் ஐந்து வருடங்களுக்கு நாட்டின் சொத்துக்களை முடிந்தவரை கொள்ளையடித்து, மக்கள் தொடர்பில் சிந்திக்காது தன்னை வளர்த்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது வலியுறுத்தினார்.

Prev Post

விடைபெறுகிறார் ஷெரினா வில்லியம்ஸ்

Next Post

ஐ.நாவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது, அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கொழும்பில் எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியது: மக்கள்…

Feb 24, 2026

மரிக்கார் கணக்கு பார்த்தது வீட்டில் உள்ள அடுப்பிலா? –…

Feb 24, 2026

நிலக்கரி மோசடியினால் ஏழை மக்கள் பாதிப்பு: திலித் ஜயவீர கடும்…

Feb 24, 2026

நிலக்கரி ஊழல் மற்றும் அவதூறு பரப்பல்களுக்கு பாட்டலி சம்பிக்க…

Feb 24, 2026

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய…

Feb 24, 2026

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு வெறும் ‘பொய் நாடகம்’: ஹரின்…

Feb 24, 2026

பௌத்த பிக்குகள் மீதான அவதூறுகளை நிறுத்த அரசுக்கு பொதுபல சேனா…

Feb 23, 2026

மேல் மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய…

Feb 23, 2026

டயஸ்போரா சவால்களுக்கு மத்தியிலும் நாமல் லண்டன் பயணம்:…

Feb 23, 2026

ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம்: பழிவாங்கும்…

Feb 23, 2026
Prev Next 1 of 69
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.