பாஜகவில் இருந்து விலகி பெண் நிர்வாகிகள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருந்தார்.

அதேபோல், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்தார்.தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்கரணையில் பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் பாஜகவில் உழைக்கும் மகளிர் நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.