பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடைய, குஜராத் கலவரம் தொடர்பாக அண்மையில் பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.