சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த தர்ஷன ஹந்துன்கொட, நேற்றிரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கைதான அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் உத்தரவில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம், ஹந்துன்கொடவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைத்தனர். எனினும், அவர் வாக்குமூலம் அளிக்க மறுப்பு தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.