யாழ். மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமானது: யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

யாழ். மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமாக இடம்பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பாணை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு, சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.