யாழ் . தாளையடியில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இரங்கல் திருப்பலியை தொடர்ந்து தாளையடி சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு .உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு ,தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.