கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும்.

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

தற்போது பெறுபேறுகள்  இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வருடம் 517,496 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.