யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் ஆரம்பம்.

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தின் முதல் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி, மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.