• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

கோட்டாபய ராஜபக்ஷ வருமான வரி சட்டத்தை இல்லாமலாக்கிமையே நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம்.

By Editor On Oct 5, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அரசாங்கத்தின் வருமானத்தில் சம்பளம் வழங்குவதற்கும் ஓய்வூதியம் வழங்குவதற்குமே போதுமாக இருக்கின்றது.

அதற்கு காரணம் எமது அரசாங்கத்தில்  கொண்டுவந்த வருமான வரி சட்டத்தை கோத்தாபய ராஜபக்ஷ் இல்லாமலாக்கிமையாகும்.

அதனால் மூலாேபாய அபிவிருத்தித்திட்ட சட்டமூலத்தை முழுமையாக இல்லாமலாக்கி, வரி நிவாரணம் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டத்தை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு நாடும் வரி நிவாரணம் வழங்குவதாக இருந்தால் அந்த நாட்டுக்கு பிரதானமாக வெளிநாட்டு செலாவணி உயர்வடைந்து செல்லவேண்டும்,

வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படவேண்டு்ம்., அதேபோன்று வரி கிடைக்கவேண்டும்.

இந்த மூன்று விடயங்களும் இருக்குமாக இருந்தாலே ஒரு நாட்டுக்கு வரி நிவாணம் வழங்க முடியும். ஆனால் எமது நாட்டின் வெளிநாட்டு செலாவணி கிடைத்து வருகின்றது.

Catchup shows

தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் வரி கிடைப்பதில்லை. வரி கிடைப்பதன் மூலமே உணவு பாதுகாப்பு தன்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

கல்வி, சுகாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும். வரி கிடைக்காமையால் நாட்டில் வறுமை நிலை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

அதனால் வரி நிவாணங்கள் வழங்குவதாக இருந்தால் எமது நாட்டின் கல்வி ,சுகாதாரம் தொடர்பில் கருத்தில்கொள்ளவேண்டும்.

எமது கல்வித்திட்டத்தின் ஆராேக்கயத்தன்மையை கவனிக்கவேண்டும். வரி நிவாரணம் வழங்கும்போது எமக்கு கல்வி ஆராேக்கியத்தன்மை கிடைக்கின்றதா என்பதை பார்க்கவேண்டும்.

இன்று பெரிய பாடசாலைகளில் ஒன்லைன் கல்வியே அதிகம் இடம்பெறுகின்றது. இவ்வாறான கல்வியில் எந்த ஆராேக்கியத்தன்மையும் இல்லை.

எனவே நாட்டில் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக கடந்த எமது அரசாங்கத்தில் 2017, 18 காலப்பகுதியில் வருமான வரி சட்டம் ஒன்றை கொண்டுவந்தோம். அதன் மூலம் அமைச்சர்களின் அதிகாரத்தை குறைத்தோம்.

நிதி அமைச்சர்கள் தங்களுக்கு தேவையான முதலீட்டாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதை இல்லாலாக்கினோம். இதனால் ஒரு வருடத்தில் வரி வருமானம் நூற்றுக்கு 38 வீதத்தால் அதிகரித்தது.

அதேபோன்று வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை 9இலட்சத்தில் இருந்து 15இலட்சம் வரை அதிகரிக்க முடியுமாகியது. இதன் மூலம் நாட்டின் வருமானத்திலும் பார்க்க செலவை குறைக்க முடியுமாகியது.

ஆனால் இன்று அரசாங்கத்தின் வருமானத்தில் சம்பளம் வழங்குவதற்கும் ஓய்வூதியம வழங்குவதற்குமே போதுமாக இருக்கின்றது.

அதற்கு காரணம் நாங்கள் அன்று கொண்டுவந்த வருமான வரி சட்டத்தை கோத்தாபய ராஜபக்ஷ் இல்லாமலாக்கினார். அதனால் அரசாங்கம் மூலாேபய அபிவிருத்தி தட்ட சட்டமூலத்தை முழுமையாக இல்லாமலாக்கி, வரி நிவாரணம் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டத்தை அமைக்கவேண்டும் என்றார்.

Prev Post

மன்னர் மூன்றாம் சார்லஸ் புலம்பெயர்வாழ் இலங்கையரைச் சந்திக்கவுள்ளார்.

Next Post

அர்ஜுன மகேந்திரனுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு : மறுத்தார் ஜனாதிபதி.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.