இயக்குனர் பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என பாராட்டப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 21-ம் தேதி தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் காரணமாக அவரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்தார்.

இதையடுத்து கடந்த 9-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின் நீலாங்கரை இல்லத்தில் ஓய்வெடுத்துவந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல் அவருக்கு நெருக்கமான பலரும் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

இருந்தாலும் வீட்டிற்கு சென்ற சில நாட்களிலே பாரதிராஜாவிற்கு சிறுநீரக குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் சில நாட்களுக்கு அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற பரிந்துரைத்தனர்.

அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாரதிராஜா. இந்த நிலையில் நாளை அல்லது ஒரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என கூறப்பட்டுகிறது.