உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை விவசாய அமைச்சர் மறைத்து செயற்படுகின்றார் – எதிர்க்கட்சி

 

நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக தெரிவித்து உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையை விவசாய அமைச்சர் மறைத்து செயற்படுகின்றார் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டு அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மக்களின் ஆணையை காட்டிக்கொடுக்கும் நிலைப்பாடுகளை எடுக்கமாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.