ஜி.எல்.பீரிஸுசுடன் தமிழ் பிரதிநதிகள் சந்திப்பு

Meiveli Media Team


தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரை நிகழ்வில் உரையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில்  சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் சுமந்திரனின் யாழ் இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், அவ்வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.