பிரிட்டனில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் வருமா : அதிரவைத்த ராணுவ தளபதியின் போர் எச்சரிக்கை

Meiveli Media Team

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல்  General Sir Patrick Sanders, ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, பிரிட்டன் தனது இராணுவத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த தேசமும் போருக்குத் தயாராக வேண்டும்  என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘நேரம் மிக வேகமாக முடிந்து கொண்டிருக்கிறது, மூன்று ஆண்டுகளுக்குள் நாம் ஒரு பெரிய மோதலுக்குத் தயாராக வேண்டும்’ என்று சமீபத்திய அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இந்தச் சூழலைச் சமாளிக்க, பிரிட்டன் அரசு ‘பாதுகாப்பு தயார்நிலை மசோதா 2026’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் தன்னார்வலர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தொழில்துறையினரை விரைவாகத் திரட்ட வழிவகை செய்யப்படும். மேலும், பனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட  War Book எனப்படும் போர் வழிகாட்டி முறையை மீண்டும் புதுப்பிக்கவும், உணவு, நீர் மற்றும் எரிசக்தி போன்ற அத்தியாவசியக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது வெறும் இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, ஒரு ‘சமூக மாற்றத்திற்கான அழைப்பு’ என்று வர்ணிக்கப்படுகிறது. இராணுவத் தளபதியின் இந்த ‘மக்கள் படை’  குறித்த கருத்து, பிரிட்டனில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் வருமா என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ‘நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஒரு போர் மூண்டால் நமது வழக்கமான இராணுவம் மட்டும் நாட்டைப் பாதுகாக்கப் போதாது என்பதை மக்கள் உணர வேண்டும்’ என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  நேட்டோ  அமைப்பில் பிரிட்டனின் பங்கை உறுதிப்படுத்தவும், ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்புச் செலவினங்களை ஜிடிபியில் 5வீதம் ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியால் பிரிட்டன் ஒரு பதற்றமான நிலையிலேயே உள்ளது. ‘1939-ஆம் ஆண்டின் குளிர்காலத்தைப் போன்ற ஒரு சூழலில் நாம் இப்போது இருக்கிறோம்’ என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.  லண்டனில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில், பிரிட்டன் தனது ஆயுதக் கிடங்குகளை நிரப்பவும், நவீன தொழில்நுட்பங்களைப் போர்க்களத்தில் பயன்படுத்தவும் தவறியது ‘மூச்சடைக்க வைக்கும் அலட்சியம்’ என்று விமர்சிக்கப்பட்டது. இனிவரும் காலம் பிரிட்டனுக்கு ஒரு மிகப்பெரிய சோதனைக் காலமாக இருக்கும் என  பலராலும்  எச்சரிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது