இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்-

அமெரிக்கா.

சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, ஒரு முக்கிய நடவடிக்கையாக இவற்றுக்கு தீர்வை காணவேண்டும் என கூறியுள்ளார்.