தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு

நேற்றைய தினம் மாலை பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்ட பொழுது – உள்ளூர் உற்பத்தி அரிசி உரைகளில் தரம் குறைந்த மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மட்ட ரக அரிசிகளை பொதி செய்து விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்றை சோதனை செய்த அதிகாரிகள் அந்த அரிசி பொதிகளுக்கு சீல் வைத்து வழக்கு தொடுத்தனர். இந்த சட்ட விரோத நடவடிக்கையில் நுகர்வோர் பாரிய அளவில் பாதிப்படைந்ததுடன் வியாபாரிகள் கொள்ளை லாபத்தை ஈட்டி வந்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.




