இங்கிலாந்து மன்னர் உயர் விருதினைப் பெற்ற தமிழ் தொண்டு நிறுவனம் – குரோளி தமிழ்க் கல்விக்கூடம்
இங்கிலாந்தில் அரசர் பெயரினால் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான The King’s Award for Voluntary Service – KAVS என்ற விருதினை இவ்வாண்டு 2025 குரோளியில் அமைந்துள்ள தமிழ் கல்விக்கூடம் TAMIL Learning Centre என்ற தமிழர் அமைப்பு தனது தன்னார்வ சேவைக்காக பெற்று பெருமை சேர்த்திருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்க்கல்விக்கூடம் குரோளியில் உள்ள தமிழ் மற்றும் பரந்த சமூகத்திற்கு தமிழ்க்கலாச்சார வேர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இளைந்தலைமுறையினருக்கு தமிழக் கல்வியினை கற்பிப்பதன் மூலம், தமிழ் பண்பாட்டு வாழ்வியல் கலாசார சமூகங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டு பணிகளுக்கான அரச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.


இன்று செவ்வாயக்கிழமை , குரோளியில் Langly Drive இல் அமைந்துள்ள Crowne Plaza Hotel இல் இந்த விருது விழா சிறப்பாக நடைபெற்றது.West Suseex இன் The Lord-Lieutenant , அரசரின் அதிகார பூர்வ பிரதிநதி Lady Emma Barnard உடன் இணைந்த அரச பிரதிநிதிகளான லெப்ரினன்கள் கூடி அரச முறைப்படி இந்த விருதை வழங்கி குரோளி தமிழ்க்கல்வி கூடத்தின் சேவை யை பாராட்டி கௌரவித்தார்கள். இந்த அரச அதிகாரப்பூர்வ விழாவிற்கு 100 க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கபட்டிருந்தார்கள். இங்கிலாந்து அரச பிரதிநிதிகள், தமிழக்கல்விக் கூட தன்னார்வலர்கள், West Sessex கவுன்சலர்கள், ஊடவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












