கொள்ளுப்பிட்டி விடுதி ஒன்றில்  தங்கியிருந்தபோது மரணமான பிரித்தானிய பெண்ணைத் தொடர்ந்து மற்றுமொரு ஜோமன் பெண்ணும் மரணம்

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண் ஒருவர்நேற்று உயிரிழந்துள்ளார்.ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 03 வெளிநாட்டு பயணிகள்  திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியாசலைியல் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பிரித்தானிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஜேர்மன் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.நச்சு வாயுவை சுவாசித்ததே இந்த இறப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.