விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி

விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.இம் மாநாட்டிலேயே விஜய் அவரது கட்சிக் கொடியின் அர்த்தத்தையும் கட்சியின் கொள்கைகளையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் தொண்டர்களுக்கான அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி வருகிறது.கட்சிக்கு எதுவிதமான அவப்பெயரும் ஏற்பட்டுவிடக் கூடாது. அதனை மனதில்கொண்டு செயல்பட வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இம் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 10ஆயிரம் பேரையாவது வரவழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வாறு வருகை தரவுள்ள தொண்டர்களின் வாகனப் பதிவு எண், இன்சூரன்ஸ், ஆர்.சி புத்தக நகல்கள் போன்றவற்றை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்பிவிட வேண்டும் என விஜய் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் மாநாட்டுக்கு வருகை தருபவர்கள் வரும் பொது வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ அல்லது வாகனங்களளால் எழும் சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.