வடகிழக்கில் கல்விமான்களை தேடும்  தேசிய மக்கள் சக்தி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் கல்விமான்களை தேடிவருகின்றது. ஓய்வு பெற்ற வைத்திய நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் என பலதரப்புக்களையும் திசைகாட்டி சின்னத்தின் கீழ் வடகிழக்கில் பெரும்பான்மையின கட்சியின் சிறுபான்மையின் பிரதிநிதிகளாக போட்டியிட வைக்க முயற்சிகள் தொடர்கின்றது.

இதனிடையே  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகள் முன்வராவிட்டால் தமிழ் அரசுக் கட்சி, தனித்து தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு அம்பாறை மற்றும் திருகோணமலையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து போட்டியிட முடியும் என தெரிவித்துள்ளார்.