இரத்து செய்யப்படும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள்

அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள்  நாடாளுமன்றத்தை கலைத்தவுடன் இரத்து செய்யப்படும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் அறிவித்துள்ளார்.

குறித்த கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதை அனைத்து அமைச்சர்களுக்கும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமைப் பணியாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

அதன்படி, அரசியலமைப்பின் நிர்ணய சபை உறுப்பினர்களான, சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் தவிர நாடாளுமன்றத்தின் ஏனைய 219 பேர் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களின் குறித்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்படும். சாதாரண முறைப்படி அமைச்சர்களுக்கு, இராஜாங்க அமைச்சர்களுக்கு அவர்களின் மனைவிமாருக்கு மற்றும் 18 வயதுக்கு குறைந்த அவர்களின் பிள்ளைகளுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு சிறப்புரிமைகள் கிடைக்கப்படுகின்றன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி அவர்களின் மனைவிமாருக்கு அல்லது கணவருக்கு குறித்த கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், இரத்து செய்யப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறியப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.