இன்று நள்ளிரவுடன் முடிவடைந்தது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை: 21ம் திகதி தேர்தல்.

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

இக்காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரசாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படாது. எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர தெரிவித்துள்ளார்.