அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இலஞ்சமாக 15 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.